Spiritual Tamil
ஆன்மீகம் சார்ந்த விடயங்கள் தமிழ் மொழி மூலம் இந்த தளத்தில் உங்களுக்கு வழங்கப்படுகிறது
செவ்வாய், 7 பிப்ரவரி, 2023
பஞ்சாட்சர ஸ்தலங்கள்
காலப் பயணம் சாத்தியமா
இன்றைய நிலவரப்படி, காலப்பயணம் என்பது அறிவியல் புனைகதைகளில் முற்றிலும் ஒரு கருத்தாகும் மற்றும் அது சாத்தியம் என்று அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை. காலப்பயணம் எவ்வாறு செயல்படும் என்பதை விளக்குவதற்கு பல தத்துவார்த்த முயற்சிகள் இருந்தபோதிலும், அவை எதுவும் சோதனை ஆதாரங்களால் ஆதரிக்கப்படவில்லை.
இயற்பியலில், பொது சார்பியல் கோட்பாடு, நேரமும் இடமும் நெருக்கமாக இணைக்கப்பட்டிருப்பதாகவும், ஈர்ப்பு விசையானது விண்வெளி நேரத்தின் துணியை வளைத்து சிதைத்துவிடும் என்றும் கூறுகிறது. இது விண்வெளி நேரத்தை வார்ப்பிங் செய்வதன் மூலம் காலத்தின் வழியாக பயணிக்க முடியும் என்ற ஊகத்திற்கு வழிவகுத்தது, ஆனால் இந்த யோசனை இன்னும் முற்றிலும் ஊகமாக உள்ளது மற்றும் எந்த சோதனை ஆதாரங்களாலும் ஆதரிக்கப்படவில்லை.
கூடுதலாக, இயற்பியல் விதிகள், காரண விதிகள் மற்றும் ஆற்றல் பாதுகாப்பு போன்றவை, காலப் பயணம் சாத்தியமில்லை என்று கூறுகின்றன. எடுத்துக்காட்டாக, காலத்திற்குப் பின்னோக்கிச் சென்று கடந்த காலத்தை மாற்றும் எண்ணம் இன்னும் தீர்க்கப்படாத பல முரண்பாடுகளையும் தர்க்கரீதியான முரண்பாடுகளையும் எழுப்புகிறது.
முடிவில், காலப்பயணத்தின் கருத்து புதிரானது மற்றும் பல நூற்றாண்டுகளாக மக்களின் கற்பனைகளைக் கவர்ந்திருந்தாலும், அது சாத்தியம் என்ற கருத்தை ஆதரிக்க எந்த அறிவியல் ஆதாரமும் தற்போது இல்லை. நேரம் மற்றும் விண்வெளி நேரத்தின் அடிப்படைத் தன்மையைப் பற்றி நன்கு புரிந்துகொள்ளும் வரை, காலப் பயணத்தின் சாத்தியம் முற்றிலும் ஊகமாகவே இருக்கும்
வியாழன், 24 பிப்ரவரி, 2022
உணவு
வணக்கம் 🙏
தாவரங்கள் நீங்கலாக ஒவ்வொரு உயிரும் தன் உடலில் உண்டாகும் வயிற்று பசியை போக்கி கொள்ள இன்னொரு உயிரின் உடலை தான் உட்கொள்ள வேண்டும் இது இயற்கை நியதி, ( விதிவிலக்காக சில தாவரங்களும் பூச்சியை உட்கொள்கிறது ) நாம் தாவர உணவை உட்கொள்ள வேண்டும் எனில் தாவரம் என்ற உயிரினத்தை கொலை செய்தாக வேண்டும் , மாமிச உணவாக இருந்தாலும் அதே நியதிதான்.
ஆக, நம் வயிறு நிறைய வேண்டுமானால் ஒரு உயிரினம் கொல்லப்பட வேண்டும், ( அதனால்தான் உணவுக்காக கொல்லப்பட்ட அந்த உயிரினத்தை மரியாதை செய்யும் பொருட்டு உணவை வீணாக்க கூடாது, வீணாக்கும் போது தான் அது பாவம் ஆகிறது ).
ஒவ்வொரு பொருளுக்கும் பண்புகள் இருப்பதுபோல தாவர உணவுக்கான சில பண்புகள் இருக்கிறது, தாவரங்கள் ஆகாயம் , காற்று , நெருப்பு , நீர் , நிலம் என்ற பஞ்ச பூதங்களை பயன்படுத்தி தன் உடலின் உள்ளேயே தனக்கான உணவை உற்பத்தி செய்து கொள்கிறது, பிற உயிரினத்தை கொன்று உண்பதில்லை, ஆதலால் நாம் தொடர்ந்து தாவர உணவு உட்கொள்ளும் போது அதன் பண்பாகிய பிற உயிர்களை கொல்லாமை என்ற பண்பு நமக்குள்ளும் எழும், அதனால் தேவை இல்லாமல் பிற உயிர்களை துன்புறுத்தும் எண்ணம் குறைகிறது, மேலும் பஞ்ச பூதங்களை உணரும் தன்மையும் அதிகரிக்கிறது, இவ்வாறான வகையில் தாவர உணவு உயிர் அனுபவ முன்னேற்றத்திற்கு உதவி செய்கிறது.
தாவரங்களை உட்கொள்ளும் உயிரினங்கள் தங்களை உண்ண வரும் உயிரினங்களை பற்றி அச்சத்துடன் வாழ்வதால், நாம் தாவரங்களை உண்ணும் உயிரினங்களை உண்ணும் போது அவற்றின் பண்பாகிய அச்ச உணர்வு நமக்கு மேலோங்கும் இது அடிமைத்தனத்திற்கு நம்மை இட்டுச் செல்லும்.
மாமிச உணவை உட்கொள்ளும் உயிரினங்கள் தங்கள் உணவை மறைந்திருந்து வேட்டையாடும் அல்லது தங்களை விட வலிமை குறைந்த உயிரினங்களை பயமுறுத்தி துரத்தி அவற்றின் உணவை தட்டிப் பறிக்கும், ஆகவே மாமிச உணவை உட்கொள்ளும் உயிரினங்களை நாம் உண்பதால் அவற்றின் பண்பாகிய கோபம் , களவு போன்ற தீய குணங்கள் நமக்கு மேலோங்கும்.
நன்றி 🙏
புதன், 23 பிப்ரவரி, 2022
இறைவனை உணர இயலுமா? இயலாதா?
வணக்கம் 🙏
இறைவனை உணர இயலுமா? இயலாதா? என்று ஆராய்வதற்கு முன்னால் மனிதன் எத்தகையவன் என்று சிந்திப்போம்.
மனிதர்களாகிய நம்மால் முப்பரிமாணத்திற்க்கு உட்பட்டதை மட்டுமே உணர இயலும், மேலும் குளிர், வெப்பம், சுகம் மற்றும் வேதனை இதை தவிர வேறு எதையும் உணர இயலா குறையை உடையது நம் தொடு உணர்வு.
துவர்ப்பு ,இனிப்பு, புளிப்பு ,கார்ப்பு, கசப்பு மற்றும் உவர்ப்பு ஆகிய ஆறு சுவைகளுக்கு அப்பாற்பட்டு எந்த ஒரு சுவையையும் அறியாத குறையை உடையது நம் சுவை உணர்வு.
மணம் ,நாற்றம் இதை தவிர வேறு ஒன்றையும் அறியாத குறையை உடையது நம் நுகர்தல் உணர்வு.
நீள ,அகல ,உயரங்களை உடைய முப்பரிமாணங்களுக்கு உட்பட்டதை 360° என்று சொல்லப்படுகிற கோள வடிவமாகவே நம் காணுதல் உணர்வு உணரும் (பஞ்சபூத கலவைகளின் செயல்களால் முப்பரிமாணத்தினுள் நிகழும் காலம் ஆனதும் முப்பரிமான திற்கு உட்பட்டதே ஆகும் ) அதற்கு அப்பாற்பட்ட எந்த பரிமாணங்களையும் அல்லது வடிவங்களையும் காண இயலாத குறையை உடையது நமது காணுதல் உணர்வு.
20 Hz (ஹெர்ட்ஸ்) முதல் 20000 Hz வரை அதிர்வெண் உடைய ஒலிகளை மட்டுமே மனிதனால் கேட்க இயலும் அதிலும் குறிப்பாக 1000 Hz முதல் 6000 Hz இடையே உள்ள ஒலியை நன்றாக கேட்டு உணர இயலும், மேலும் 20 Hzக்கு குறைவான மீயொலி களையோ,20000 Hzக்கு அதிகமான மிகையொலிகளையோ அல்லது அதற்கு அப்பாற்பட்ட எந்த ஒன்றையும் கேட்டு அறிய முடியாத குறையை உடையது நம் கேட்டல் உணர்வு. (இதில் சித்தர்களும் ஞானிகளும் விதி விலக்கு அவர்கள் வேறு பரிமாணங்களில் உள்ளதை அதிர்வுகளாக உணர்ந்து நமக்கு மந்திரங்களாகவும் பாடல்களாகவும் (தோத்திரம் ) நமக்கு தந்து கொண்டு இருக்கிறார்கள் அதை தொடர்ந்து பயன்படுத்தி வர உயிர் அனுபவம் உயர உதவி செய்யும் ).
பஞ்சபூத கலவைகளுக்கும் அவற்றின் நிகழ்வுகளுக்கும் அப்பாற்பட்டு எதையும் பகுத்து அறிய இயலா குறையை உடையது நம் பகுத்தறியும் உணர்வு.
ஆக மனிதர்களாகிய நாம் கொண்டுள்ள ஆறு உணர்வுகளும் குறையை உடைய உணர்வுகளாகும், எனவே ஆறு குறை உணர்வுகளை உடைய உயிரினம்தான் மனிதன்.
இனி இறைவனை பற்றி சிந்திப்போம்,
குறிப்பு : அது என்று வாசிக்கும் போது இறைவன் என கொள்க.
"அது மட்டுமே அதை அறியும்"நிலை தான் அதன் சுயநிலை இந்த நிலையை தான் சில நாத்திகவாதிகள் கடவுள் இல்லை என கூறுகிறார்கள்… இந்த சுய நிலையானது பரிமாணங்களுக்கு உட்பட்ட மற்றும் அப்பாற்பட்ட எல்லா படைப்புகளையும் உள்ளடக்கிய நிலை, அதில் நம்மால் உணர இயலுமாறு வரையறுக்கப்பட்டதை அல்லது படைக்கப்பட்டதை மட்டுமே நம்மால் உணர இயலும்.
அதன் சுய நிலையை மனித மனத்தால் கற்பனை செய்ய இயலாது,
நமது வார்த்தைகளால் அதை சொல்ல இயலாது ( "அது மட்டுமே அதை அறியும் " என்ற சொல் கூட பொய்யாகிப் போகும் 🤔).
நமது உடலாலும் அதை உணர இயலாது.
இப்போது உங்கள் மனதில் ஒரு சந்தேகம் தோன்றும் சித்தர்களும், ஞானிகளும் முருகன் ,சிவன் ,ராமன், கிருஷ்ணன், ஏசு , புத்தர் இன்னும் பல இறைவர்களை கண்டதாக அறிவித்து இருக்கிறார்களே அது எவ்வாறு? (இஸ்லாம் மார்க்கத்தில் அவர்கள் உருவம் இல்லா ஒரு இறை கொள்கையை பின்பற்றுகிறார்கள் ஆதலால் அதை நான் இங்கு சேர்க்கவில்லை)
சித்தர்களும் ,ஞானிகளும் உயர்ந்த உயிர் அனுபவங்களை பெற்று இருப்பதால் அது தன் சுய நிலையில் இருந்து இறங்கி உயர்ந்த உடல் படிமங்கள் ஆன மேற்சொன்ன இறைவர்கள் வடிவில் காட்சி தருகிறது, அதன் சுய நிலையை இவர்களால் உணர இயலாது.
ஆதலால் பரிமாணங்களுக்கு உட்பட்ட நம்மால், பரிமாணங்களுக்கு உட்பட்டு ( பரிமாணங்களுக்கு உட்படுவதால் அதன் சுயநிலை கெடுவதில்லை ) தன் சுய நிலையில் இருந்து இறங்கி வந்த அதை மட்டுமே உணர இயலும், அதன் சுய நிலையை உணர இயலாது.
நன்றி 🙏
செவ்வாய், 22 பிப்ரவரி, 2022
ஆன்மீகம் அறிமுகம்
ஆன்மீகம் அறிமுகம்
ஆன்மீகம் அறிமுகம் |
வணக்கம் 🙏
ஆன்மீகம் என்பது உயிரின் தற்போதைய அனுபவ நிலையில் இருந்து அடுத்த நிலைக்கு அல்லது முடிவான இறை நிலைக்கு உயர்த்துவதற்கான அறிவையும் அதற்கான செயல்களையும் உணர வைக்கும் ஒரு ஆற்றலின் (இறையின்) வெளிப்பாடு ஆகும். அதைப் பற்றி இங்கே அறிமுகம் செய்கிறேன்.
உயிர்கள் தன் நிலையில் இருந்து அடுத்த நிலைக்கு எவ்வாறு உயர்கிறது?
ஒரு உணர்வை (தொடுதல்) மட்டும் உடைய தாவரத்தின் உள் உறையும் உயிரானது தாவரங்களில் எத்தனை வகையான தாவரங்கள் உண்டோ அத்தனை வகைகளிலும் மாறி மாறி பிறந்து அத்தனை வகையான தொடு உணர்வு அனுபவத்தையும் பெற்று, அதற்கு அடுத்த நிலை அனுபவமான சுவை அறிதலை தொடு உணர்வுடன் கூடி பெற நத்தை முதலான உடலுக்கு செல்கிறது அல்லது உயர்கிறது,
அவ்வாறே இரு உணர்வு அனுபவ நிலையில் எத்தனை வகைகள் உண்டோ அத்தனையிலும் அனுபவம் பெற்று அடுத்த நிலையான நுகரும் உணர்வை தொடுதல் மற்றும் சுவை அறிதல் உணர்வோடு கூடி பெற அல்லது உயர எறும்பு முதலான உடலை உடைய அத்தனை வகைகளிலும் பிறந்து,
அதற்கு அடுத்த உயிர் நிலையான கண்டு உணர்தலோடு தொடுதல் ,சுவைத்தல், நுகர்தல் போன்ற உணர்வுகளும் கூடி பெற அல்லது உயர நண்டு முதலிய வகைகள் அனைத்திலும் பிறந்து,
அடுத்த நிலையான கேட்டு உணர்தலோடு தொடுதல், சுவைத்தல், நுகர்தல், காணுதல் போன்ற உணர்வுகளும் கூடி உயிரின் அனுபவம் உயர (உடலின் அனுபவம் அல்ல) விலங்குகளில் எத்தனை வகைகள் உண்டோ அத்தனையிலும் பிறந்து அனுபவம் உயர்ந்து அடுத்த நிலைக்கு உயரும்.
இது வரையிலான ஒரு உணர்வு முதல் 5 உணர்வுகள் வரையிலான உயிரின் அனுபவ நிலை உயர்வதற்கு அந்தந்த உயிர்கள் எந்த விதமான முயற்சியும் மேற்கொள்ள தேவையில்லை.
ஆனால் பகுத்து உணர்தலோடு தொடுதல், சுவைத்தல், நுகர்தல், காணுதல், கேட்டல் போன்ற உணர்வுகளும் கூடி பெற அல்லது உயிரின் அனுபவ நிலை உயர, உடல் படிமங்களின் உயர்ந்த நிலையான மனித உடலை அடைகிறது.
உயிரானது மனித உடலினுள் இருந்து அடுத்தடுத்த நிலைகளுக்கு அல்லது முடிவான இறைநிலை என்னும் பிறவாப் பெருநிலைக்கு உயர வேண்டுமானால் அந்த உயிருக்கு முயற்சிகள் தேவை, அவ்வாறு செய்யப்படும் முயற்சிக்கான அறிவும் செயலும் இணைந்து செயல்படுதலை ஆன்மீகம் என்கிறோம்.
நன்றி 🙏
பஞ்சாட்சர ஸ்தலங்கள்
பஞ்சாட்சரம் என்பது தென்னிந்திய மாநிலமான தமிழ்நாட்டில் அமைந்துள்ள ஐந்து கோயில்களை விவரிக்க இந்து மதத்தில் பயன்படுத்தப்படும் ஒரு சொல். இந்த கோ...
-
காலப்பயணம் சாத்தியமா? இன்றைய நிலவரப்படி, காலப்பயணம் என்பது அறிவியல் புனைகதைகளில் முற்றிலும் ஒரு கருத்தாகும் மற்றும் அது சாத்தியம் என்று அறிவ...
-
ஆன்மீகம் அறிமுகம் ஆன்மீகம் அறிமுகம் வணக்கம் 🙏 ஆன்மீகம் என்பது உயிரின் தற்போதைய அனுபவ நிலையில் இருந்து அடுத்த ...
-
வணக்கம் 🙏 தாவரங்கள் நீங்கலாக ஒவ்வொரு உயிரும் தன் உடலில் உண்டாகும் வயிற்று பசியை போக்கி கொள்ள இன்னொரு உ...